Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

ஆனந்த மகாகணபதி


குமுதம் பக்தி ஸ்பெஷல் 16-12-2008 இதழில் வெளியானது.
  

இதிகாச புராண பிரசித்தமான தலங்களுள் தஞ்சை காவிரியின் வடகரையிலுள்ள உமையாள்புரமும் ஓன்று. இங்குள்ள சிவன், பெருமாள் கோயில்கள் பிரசித்தமானது. 

இங்கு காவிரிக்கரையில் கோயில் கொண்டுள்ள ஆனந்த மகாகணபதியின் பெருமையை சொல்ல முடியாது. 

சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு இந்த கணபதி ஓர் அரச மரத்தினடியில் இருந்ததாகவும், அம்மரம் ஓருநாள் விநாயகருக்கு சிறிதும் சேதமின்றி வேருடன் விழுந்து விட்டதாகவும், சுவாமிகள் ஓருவர் யந்திரம் ஓன்றை வைத்து கணபதியை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது. 1931ம் ஆண்டு சிறிய ஆலயம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

அழகிய உருவத்துடன் காட்சிதரும் கணபதியின் முன் நிற்கும்போது நம் இடர்கள் அனைத்தும் மறைந்து விட்ட உணர்வு ஏற்படுகிறது. வேண்டியவைகள் அனைத்தும் நிறைவேறிவிட்டதை போல் மனம் நிரம்பி விடுகிறது.

மாதந்தோறும் சங்கட ஹர சதுர்த்தி அன்று இரவு அபிஷேக ஆராதனையும், ஓவ்வொரு வருஷமும் ஆவணி அமாவாசைக்கு முன்பு நடை பெறும் நிறைமணி என்ற ஓரு நாள் உத்ஸவமும், பிள்ளையார் சதுர்த்தியும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. 

நிறைமணி அன்று இரவில் நடைபெறும் புஷ்பலங்காரம் கண்கவர் காட்சியாகும். சின்ன உருவில் சிங்காரமாய் அமர்ந்து  அன்பர்களின் துன்பங்களைத் தீர்த்து வேண்டிய வரங்களை வாரி வழங்கும் கற்பக விருட்சமான ஆனந்த மகாகணபதி, அவ்வூர் மக்களுக்கு மட்டிமன்றி, அருகிலுள்ள கிராம மக்களின் வேண்டுதல்களையும் நிறைவேற்றி அருள்பவர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக