Thanjai

Thanjai

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

ஸ்ரீ சாந்த துர்கா !


ஸ்ரீ சாந்த துர்கா
தீபம் அக்டோபர் 05, 2012 இதழில் வெளியான கட்டுரை





இருப்பிடம்: கோவாவில்போண்டாதாலுகாவில்காவேலம்என்ற இட்த்தில் அமைந்துள்ளது. யிலிருந்து 33 கி.மீ.
தொடர்புக்கு: 0832-2312557, 2319900

துக்கம் என்னும் கோட்டையை தகர்ப்பவள்; துர்க்கமன் எனும் அசுரனை மாய்த்தவள்ஸ்ரீ துர்கா. அந்த அம்பிகையை, சாந்த துர்கா எனும் பெயரில் நாம் தரிசிப்பது கோவாவில்

இந்த பெயர் எப்படி வந்தது அன்னைக்கு? ஒரு முறை ஈசனுக்கும், நாராயணனுக்கும் ஒரு வாக்குவாதம் ஏற்பட்ட்து. அது யுத்தமாகி ஈரேழு உலகங்களும் நடுநடுங்கியது. இவர்களை சமாதானம் செய்ய முயன்றார் பிரம்மா ! ம்ஹூம் சண்டை நின்றபாடில்லை ! உடன் ஓடினார், அன்னை ஆதிபராசக்தியை நோக்கி. அடைக்கலம் தந்த தேவியும், தன் கருணைக் கண்களை ஏறிட்டு, சிவா-விஷ்ணுவை இரு உள்ளங்கைகளில் ஏந்தினாள். சமாதானம் செய்தாள். அன்னையிடம் அமைதி அடையாதவர் எவரும் உண்டோ? இவ்வாறு சிவ, நாராயணரை சாந்தப் படுத்திய தேவிசாந்த துர்காஆனாள் என்பது புராண வரலாறு.

சரஸ்வத் பிராம்மணர்கள் என்ற அந்தணர்களின் குல தேவதையே ஸ்ரீசாந்த துர்கா. கோவாவின் மிக முக்கியமான, பெரிய ஆலயங்களுள் இதுவும் ஒன்று. கண்ணைக் கவரும் விதமாக அழகுற அமைந்துள்ள கோபுரஙகளும், ஆறு நிலைகள் கொண்ட தீபத்தம்பமும் நம்மை ஈர்த்து நிறுத்துகின்றன. விழா நாட்களில் தீபங்கள் ஏற்றப்பட்டு தீபத்தம்பம் ஜெகஜோதியாகக் காட்சி அளிக்கும். கிழக்குப் பார்த்த கோபுரத்தின் இரு புறமும்நகர் கானாஎனப்படும் இசைக் கருவிகள் உள்ளன. இவை விசேஷ நாட்களிலும், தினமும் மூன்று வேளை ஆரத்தி நடைபெறும் போதும் இசைக்கப்படும். பக்தர்கள் தங்க, ஆலயத்தில் அறைகள் அமந்துள்ளன.

தீபத் தம்பத்துக்கு முன்பாக க்ஷேத்திர பலகர் சன்னதி அமைந்துள்ளது. கணபதி மற்றும் நாராயணருக்கு தனி சன்னதிகள் உள்ளன. இவர்களை வணங்கியபின் நீண்ட நடை தாண்டிச் சென்றால் கருவறையில் காட்சி தருகிறாள் அன்னை. பெயருக்கேற்ற கருணை த்தும்பும் விழிகள்; நான்கு கரங்கள்; நின்ற திருக்கோலம். மேலிரு கைகளில் நாகங்களும், கீழ் வலக்கை அபய ஹஸ்தமாகவும், இடக்கை வர ஹஸ்தமாகவும் கொண்டு அன்பே உருவாய் அருள்காட்சி தருகிறாள். அன்னையைக் காணக் கண்ணிரண்டு போதாது. ‘என்னிடம் உன் பாரங்களை, துன்பங்களை இறக்கி வைத்து விடு. நான் உன்னை பார்த்துக் கொள்கிறேன்என்று புன்னகை புரியும் வதனம். சமாதானமாகிய சிவனும், விஷ்ணுவும் இருபுறமும் காட்சி தருகின்றனர். தேவிக்கு முன்னால் ஆறு அங்குல உயரத்தில் ஒரு சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அபிஷேகங்கள் அன்னைக்கும், சிவலிங்கத்துக்கும் சேர்ந்தே நடப்பது இங்கு விசேஷமானது. சக்தியும் சிவனும் இணை பிரியாதவர் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.

தேவிக்கு முன்பாக ஒரு சிங்க உருவம் வரந்த பெல்ட் போன்ற ஒரு பட்டை உள்ளது. இதற்குசிம்ம பட்டாஎன்று பெயர். திருமணம், பிள்ளைப்பேறு, வியாபார ஒப்பந்தங்களுக்கு உத்தரவு பெற பக்தர்கள் இப்பட்டைக்கு பூஜை செய்கின்றனர். அந்தப்பட்டையில் 58 இடங்களில் முழு மலர்கள், மொட்டுக்கள், இதழ்களை குறிப்பிட்ட கிரமமாக வைத்து உத்தரவு கேட்கும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.

ஆதியில் இவ்வாலயம் கெலோஷி என்ற இட்த்தில் இருந்தது. பின்னர் 1566-ல் போர்த்துகீசியர் படையெடுப்பின் போது தேவியின் திருவுருவம் போண்டா (Ponda) தாலுகாவிலுள்ள காவேலம் (Kavelam) என்ற இடத்தில் ஒளித்து வைக்கப்பட்டது. அச்சமயம், அங்கிருந்த தாழ்த்தப்பட்ட மக்களே அதைப் பாதுகாத்து வந்தனர். அதற்கு நன்றி கூறும் விதமாக இன்றும் அவர்களை, ஆலய கருவறை வரையில் அனுமதிக்கிறார்கள். நாம் தரிசிக்கும் ஸ்ரீசாந்த்துர்கா தேவியின் சிலாரூபம் 1902-ல் உருவாக்கப்பட்டது. பழைய விக்கிரகம் இன்றும் கருவறையில் தேவியின் பின்புறம் நிறுவப்பட்டு தினப்படி ஆராதனைகள் செய்யப்படுகிறது.

நவராத்திரி உற்சவம் இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தினம் ஒரு அலங்காரத்தில் அம்மனின் திருவுலா அம்ர்க்களமாக இருக்கும். யாகங்கள் விமரிசையாக நடைபெறும். சிவன், விஷ்ணு, அம்பாள் என மூவரும் ஒரே சன்னிதியில் காட்சி தந்து, நம் ஊழ்வினைகளைக் காணாமல் போகச் செய்யும் இந்த உன்னத ஆலயம், கோவா செல்வோர் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று.