Thanjai

Thanjai

வெள்ளி, 26 ஜூலை, 2013

தஞ்சை கலெக்டருக்கு ஒரு கடிதம்

(குமுதம் சிநேகிதி ஜூலை 1-15 இதழில் வெளியானது)



தஞ்சைப் பெரிய கோயிலின் நெடிதுயர்ந்த அந்தக் கோபுரத்தையும், நந்தியையும் அற்புதமான சிற்பக் கலையையும் ஆயிரம் முறை கண்டாலும் அலுக்குமா என்ன? தஞ்சை செல்லும் ஒவ்வொரு முறையும் அந்த ஆலயத்தைக் கண்டு சற்று நேரம் ராஜரஜனின் காலத்திற்கே சென்று விடுவேன் நான்!

சமீபத்தில் தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சென்றிருந்தோம். சரித்திரப் புகழ் மிக்க அந்த ஆலயத்தின் நுழைவாயில் அருகிலேயே காணப்படும் அந்தக் கட்டணக் கழிப்பிடம், ஐய்யகோ…! ராஜராஜ சோழன் மட்டும் இதைப் பார்த்தால் கண்ணீர் விட்டுக் கதறியிருப்பான். அகழி தாண்டி ஆலயத்திற்குள் மூக்கை மூடிக் கொண்டுதான் நுழைய வேண்டியுள்ளது. திரும்ப வெளியே வரும்போதும் அதே நிலைதான்! இதைவிடக் கொடுமை, தட்டியால் கட்டப்பட்ட கொட்டகைதான் கழிவறையாம். அந்தத் தட்டியிலும் அங்கங்கே இருக்கும் இடைவெளிகளில் உள்ளே பெண்கள் சிறுநீர் கழிப்பது வெளியிலிருந்து பார்த்தால் அப்படியே தெரிகிறது. தவிர, ஒருவர் உள்ளே போனால் அவர் வெளியே வரும்வரை அடுத்தவர் காத்திருக்க வேண்டும். இதற்குக் கட்டணமோ ஐந்து ரூபாய்.


வெளி மாநிலத்தவர், வெளிநாட்டினர் என்று பலரும் வருகை தரும் நம் தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலாத்தலம் இப்படி இருப்பது நமக்கெல்லாம் அவமானமில்லையா? தஞ்சை கலெக்டர் பொதுமக்களுக்கு ஒரு சுத்தமான கழிவறையைக் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுத்தால் நலமாக இருக்கும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக